LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

வார ராசிபலன் 2017 அக்டோபர் 8 முதல் 14 வரை

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


5/10/2017, 9:31 pm

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்:

11.10.2017 புரட்டாசி 25 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டிதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்:

தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் புதனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு பகவான் 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெறும் வாய்ப்பு அமையும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சனிப்ரீதி விநாயகரை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்    8, 11, 12.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்:

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் 6-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படும் என்றாலும் 3-ல் ராகு 5-ல் புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கை கால் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு  பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை குறைத்து கொள்வது நல்லது. செவ்வாய் கிழமை விரதமிருந்து முருக பெருமானை வணங்குவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 13, 14.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்:

சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 4-ல் வலுவாக சஞ்சரிப்பதும் 3-ல் செவ்வாய் 5-ல் குரு சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். துர்க்கையம்மனை விளக்கேற்றி வழிபடுவதால் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 8, 11, 12.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்:

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே  அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களை அடைவீர்கள். 2-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் 13-ஆம் தேதி முதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் உள்ள சின்ன சின்ன பிரச்சினைகள் கூட வார இறுதியில் குறையும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும் மற்றவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். செண்பகப்பூவால் செவ்வாய்க்கு அர்ச்சனை செய்வதால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10, 13, 14.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்:

பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் எதிர்பார்த்த படி இருக்காது என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது  உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.  தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வணங்குவதும் பிரதோஷ விரதமிருப்பதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்:

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் இருப்பதும் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும் நல்லது-. தன ஸ்தானத்தில் குருவும் லாப ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் பணவரவுக்கு பஞ்சமிருக்காது. தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலப்பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்களும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு கல்வியில் உயர்வடைவார்கள். செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனையும் சிவனையும் வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -  11, 12, 13, 14.

சந்திராஷ்டமம் 06.10.2017 இரவு 07.35 மணி முதல் 08.10.2017 இரவு 09.33 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்:

தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசியில் குருவும் 12-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் மன அமைதி குறைவு ஏற்படும் என்றாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 8, 13, 14.

சந்திராஷ்டமம் 08.10.2017 இரவு 09.33 மணி முதல் 10.10.2017 இரவு 11.18 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை:

என்ன தான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடு பட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் சஞ்சரிப்பதும் ராசியதிபதி செவ்வாய் இவ்வாரம் 10,11-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள் விலகி லாபங்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, எள் தீபம் ஏற்றி வழிபடுவதால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10.

சந்திராஷ்டமம் 10.10.2017 இரவு 11.18 மணி முதல் 13.10.2017 அதிகாலை 02.03 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்:

எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். சனிப்ரீதி அனுமனை வழிபடுவதும் அனுமன் துதிகளை கூறுவதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12.

சந்திராஷ்டமம் 13.10.2017 அதிகாலை 02.03 மணி முதல் 15.10.2017 காலை 06.21 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, சர்ப கிரகங்கள் 1,7-ல் சஞ்சரிப்பதாலும் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சாதகமான பலன்களும் தாராள தனவரவும் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வதால் மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளையும், வீண் விரயங்களையும் தவிர்க்கலாம். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய திறன் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகள் நன்றாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. பிரதோஷ விரதம் மேற்கொள்ளுதல், காயத்திரி மந்திரம் படித்தல் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 8, 13, 14.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி:

சமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு 8-லும் சூரியன் 7-லும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற பலனையே கொடுக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் அதிகரிக்கும். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, மற்றவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. செவ்வாய் 6-ஆம் வீட்டில் 13-ம் தேதி வரை சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவிகள் கொண்டு எதையும் சமாளித்து விடுவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதும் உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வதால் நல்ல காரியம் நடைபெறும்.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
You cannot reply to topics in this forum