நீங்கள் 3,12,21,30 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணின் நாயகன், வியாழன் வருவார். பிறருக்கு வழிகாட்டிடும் போதகர், முனிவர், தர்ம கர்த்தர். மந்திரி, நல் ஆசிரியர் போன்ற நல் உள்ளம்,படைத்தவர் நீங்கள், கௌரவமான வாழ்க்கை அமையும்.பொது காரியங்களின் உங்களை ஈடுபடுத்தி மற்றவர்களுக்கு வழிக்காட்டுவீர்கள். சமாதானப்பிரியர், பெரியோர்களிடம் பணிவும், கீழ்நிலையுள்ளவர்களிடம் அன்பு காட்டுவீர்கள்.தீர்க்கமான சொல் உங்களுடையதாக இருக்கும். பொது ஸ்தாபானங்கள் உங்களால் பெருமையடையும், புதிய விஷயங்களை உலகுக்கு சொல்லக்கூடிய ஆற்றல் உங்களிடம் தான் அதிகம் இருக்கும். வாதிடும் திறமை அதிகம் உள்ளவர்கள் நீங்கள். பிறருக்கு மனமிறங்கி செயல்படுபவர்கள். மருத்துவர்களாகவும் சேவை மையம் நடத்துபவர்களாகவும், சமுக நோக்குடன் அரசியலிலும். ஈடுபடுவீர்கள். பிரயாணகளில் வளர்பதிலும் ஆர்வமிருக்கும். எண்ணில் பலம் குறையும் போது பிறர் அறியாவண்ணம் - சண்டை மூட்ழ விடுவீர்கள்.உங்களின் குறைபாடு குடும்பத்திலுள்ளவர்களை கவனிக்காமல் வெளியுலகத்தை பார்;ப்பீர்கள். குடும்ப அங்கத்தினர்கள் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் உடலில் ஏற்படும் நோய்கள் வயிற்று உபாதைகள். தீராத தலைவலி, எரிச்சலுடன் கூடிய நோய், வாதநோய், மன உளைச்சல், தொண்டை, நாக்கு, காது, தொடர்பான நோய்கள், நிவர்த்திற்குரிய வழிகள் அதிக பொறுப்புகளை ஏற்று கொள்ளாதீர்கள்,சாப்பிடும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் முறைப்படுத்துங்கள் முரண்பாடு உடையவர்களுடன், விவாதம் செய்வதை குறைத்துக் கொள்ளவும், நோய் நிவர்த்தியும். பிரச்சனைகளால் ஏற்படும் குழப்பங்களையும் போக்கி அதிர்ஷ்டத்ததை அள்ளி தரும் ரத்தினகற்கள் - கனகபுஸ்பராகம், அமிதிஸ்;ட், டோபாஸ் உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் - 3ன் வரிசை, 9ன் வரிசை உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் - தங்கநிறம். ரோஸ் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை -வட கிழக்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை- வியாழன் உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் - தெட்சணாமூர்த்தி
எண்-3 - குரு
Posted in: 'அட்டமாதிபதி'
You cannot reply to topics in this forum